ப ாலஸ்தீனர்களை இனப் படுகொலை செய்யும் இஸ்ரேலிய ராணுவப் படை களுக்கு நிதி, ஆயுதங்கள் மற்றும் ஆதரவு வழங்கும் அமெரிக்கா உடனடியாக அனைத்தையும் நிறுத்தி கொள்ள வேண்டும். உடனடியாக தாக்குதல் நிறுத் தப்படுவதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும். நவம்பர் 7 முதல் 10 வரை அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனும், பாதுகாப்பு அமைச்சர் லாய்டு ஆஸ்டினும் இந்தியப் பயணம் மேற்கொள்கிறார்கள். இந்திய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுடனான 2+2 அமைச்சரக பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.
அமெரிக்க ஏகாதிபத்தியமும், இஸ்ரேலும் இணைந்து பாலஸ்தீன மக்களை படுகொலை செய்து கொண்டிருக்கும் வேளையில், அவர்களை அங்கீகரிப்பதை மோடி அரசு உடனடியாக நிறுத்தி கொள்ளவேண்டும். போரை நிறுத்து என்ற உலகின் குரலை இந்தியா எதிரொலிக்க வேண்டும்.